சென்னை: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 பைனலில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 184 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி - நாராயண் ஜெகதீசன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 58 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். கவுஷிக் 26 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ராதாகிருஷ்ணன் 3, சசிதேவ் 12, ராஜகோபால் சதீஷ் 11 ரன்னில் வெலியேறினர்.