திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோவையில் இருந்து பார்வையிட வந்த இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் 7 குழிகள், அகரத்தில் 8 குழிகள், கொந்தகையில் 4 குழிகள், மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், உழவு கருவி, பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.