தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கனிமொழி கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். புதுக்கோட்டை கருக்காகுறிச்சி வடதெரு, ராமநாதபுரம் என 2 இடங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories: