மகளிர் வில்வித்தை தனிநபர் காலிறுதியில் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி (இந்தியா) 0-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஆன் சானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். வில்வித்தையில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக விளங்கிய தீபிகா, காலிறுதியுடன் விடைபெற்றது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.