சின்னாளபட்டி: ஸ்ரீராமபுரம் பேரூராட்சி கட்டயகவுண்டனூரில் இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்டயகவுண்டனூரில் 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலை தொட்டி உள்து. இந்த தொட்டியின் நான்கு தூண்களும சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் தொட்டியின் மேற்கூரை பெயர்ந்து அடிக்கடி காற்று அடிக்கும் போதும் மழையின் போதும் கீழே விழுவதால் அப்பகுதியை கடந்து செல்வோர் உயிர் பயத்தில் உள்ளனர்.