காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனிாயர் பெயின்ட் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு பொருட்களை ஏற்றி செல்லும் லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக சென்னை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி, டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.