மும்பை: எல்ஐசி நிறுவனம் ஆரோக்ய ரக்ஷக் என்ற, மருத்துவ காப்பீட்டை பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 19ம் தேதி முதல் இந்த புதிய காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனி நபர்கள், தங்கள் பெயரிலும், தங்களின் மனைவி, குழந்தைகள் பெற்றோர் பெயரிலும் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கலாம். குழந்தைகளாக இருந்தால் 91 நாட்களில் இருந்து 20 வயதுக்கு உட்பட்டவர்களை திட்டத்தில் சேர்க்கலாம். பாலிசி காலத்தை பொறுத்தவரை, குழந்ைதகளுக்கு 25 வயது வரையிலும், பெற்றோர், மனைவிக்கு 80 வயது வரையிலும் அனுமதிக்கப்படுகிறது.