மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஏர்ஏசியா விமானம் 61 பயணிகளுடன் நேற்றிரவு 10.45 மணிக்கு சென்னைக்கு வந்தது. அப்போது சூறைக்காற்று அதிகமாக மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க முடியவில்லை. சிறிது நேரம் வானில் வட்டமடித்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.