இலங்கை கடற்படை தொல்லையை தடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொழில் செய்யவிடாமல் விரட்டி அடித்து, மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் தூக்கில் போட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின், இதுபோன்ற செயல் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வருமானமும் குறைந்து வருகிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் உரிய கவனம் செலுத்தி, இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: