சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரிமுத்து (23). இவர் 75 சதவீதம் கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. சென்னை லயோலா கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கண் பார்வை குறைவுடையோருக்கான மாவட்ட, மாநில, தேசிய மற்றும் ஆசிய அளவிலான செஸ் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள், கோப்பைகளை பெற்றுள்ளார். மாநில சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு 63 நாடுகள் பங்கேற்று இணையதளம் மூலமாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான செஸ் போட்டியிலும், இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை வகித்து மாரிமுத்து விளையாடியுள்ளார்.