இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குசால் பெரேரா காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார். அண்மையில் இங்கிலாந்து தொடரில் இலங்கை படுதோல்வியை சந்தித்த நிலையில் பெரோா கேப்டன் பதவியில் இருந்து நீங்கப்பட்டு இந்திய தொடருக்கு தசுன் ஷானகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக குசால் பெரேரா இந்திய தொடரில் இருந்துவிலகி உள்ளார்.