ஜெய்ப்பூர்: ‘ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி,’ என்பார்கள். ஏனெனில், அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதற்குள் இருக்கும் சொத்தெல்லாம் கரைந்து, அந்த தந்தை நடுத்தெருவுக்கு வந்து விடுவான் என்பதை எடுத்துக் காட்டவே, இந்த பழமொழியை அந்த காலத்தில் உதாரணமாக கூறுவார்கள். ஆனால், நவீன யுகத்தில் இந்த பழமொழிக்கு இடமின்றி மலையேறி போய் விட்டது. இதற்கு உதாரணம் தான், ராஜஸ்தானில் நடந்துள்ள இந்த சம்பவம். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ சகாதேவ் சகரன். ஏழை விவசாயி. இவருக்கு 5 பெண் பிள்ளைகள். நிலத்தில் உழைத்து ஓடாக தேய்ந்து, அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு பெண்களை படிக்க வைத்தார். அந்த பெண்களும் தந்தையின் கஷ்டத்தை புரிந்து படித்தனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.