டெல்லி: 8 கைதிகளை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்ட பிறகும் விடுதலை செய்ய தாமதம் ஆனது பற்றி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. பிரச்னையை தானாக முன்வந்து தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நாளை விசாரிக்க முடிவு செய்துள்ளது. சிறுவர்களாக இருந்தபோது செய்த குற்றத்துக்காக 13 பேர் ஆக்ரா சிறையில் உ.பி.போலீசால் அடைக்கப்பட்டனர்.