சென்னை: மாவட்ட தொழில்நுட்ப அலுவலர்களால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க கட்டிட, மனை பிரிவுகளுக்கான வரைபட அனுமதி பெறும் நடைமுறையில் மாற்றம் செய்து டிடிசிபி இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து நகர் ஊரமைப்பு இயக்குனர் (டிடிசிபி) இயக்குனர் சரவணவேல்ராஜ் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட அலுவலகத்தில் இருந்து நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் சம்பந்தமான உத்தேசங்கள் அனுப்பப்பட வேண்டிய சரிபார்ப்பு படிவம் வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தலைமை அலுவலகத்தில் பெறப்படும் உத்தேசங்கள் முழு வடிவில் சரிபார்ப்பு படிவத்தின்படி இல்லாமல் பெரும்பான்மையாக வரைபடங்கள், ஆவணங்கள் குறைபாட்டு உடன் பெறப்படுகின்றன.