லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த 3 ஆண்டில் 6,476 துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும், அதில் 124 பேர் கொல்லப்பட்டதாகவும் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய 87 பேர் கூட்டாக வெளியிட்ட திறந்தவெளி அறிக்கையில், ‘உத்தரபிரதேசத்தில் நடக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. மாநிலத்தில் சட்டவிரோதக் கொலைகள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தாக்குதல், மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல் அதிகரித்துள்ளன. அரசு நிர்வாகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால், ஜனநாயக அழிவுக்கு வழிவகுக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு அடக்குமுறையை கையாண்டது.