திண்டுக்கல்: திண்டுக்கல்- பழநி செல்லும் சாலையில் முருகபவனத்தில் இருந்து பழநி பைபாஸ் சாலை வரை குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு போக்குவரத்து அதிகளவு உள்ள இச்சாலையின் ஓரங்களில் மணல் முறையாக அப்புறப்படுத்தாமல் குவியல், குவியலாக கிடக்கிறது. சில இடங்களில் சாலையோரம் சுமார் 5 அடி அளவிற்கு மணல் குவியல் பரவி கிடக்கிறது.