திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த கோளப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ரவி, கால்நடை விவசாயி. இவர் நேற்று தனது வீட்டின் முன் 2 வண்டி மாடு, 4 கறவை மாடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 பசுமாடு, ஒரு வண்டி மாடு ஆகியவை சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தது.