ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விதைத்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொண்டு வருவார்கள். அவ்வாறு, அவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக நெல் மூட்டைக்கு ரூ. 40 வசூலிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.