திண்டுக்கல்: கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிகவும் தீவிரம் எடுத்திருந்தது. இதன் காரணமாக கடந்த 75 நாட்களாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தது. கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இறுதியாக வெளியிடப்பட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் இ பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டி பூங்கா மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டது.