டெல்லி நாடாளுமன்ற அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பலர் நல்லொழுக்கத்தை பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் இது போன்ற செயல்பாடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் சந்திர சூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு கூறியுள்ளனர். கடந்த 2015ம் தேதி கேரள சட்டப்பேரவையில் நிதி மசோதா தாக்கலின் போது, அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.