சென்னை: யூ - டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். குறிப்பாக 160க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடுமட்டுமின்றி அவரையும் அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்திருந்தனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட பப்ஜியை விளையாண்டு அதில் சிறுவர், சிறுமியர்களிடம் அவதூறாக பேசும் வகையில் வீடியோ பதிவிட்ட காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.