கொலம்பியா : கொலம்பியாவில் விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட அரசு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. போகோடாவில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம் நிலநடுக்கம் தாங்கும் வசதி இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.கட்டிடத்தை சுற்றி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு , கட்டிடம் தகர்க்கப்பட்டது.