புதுடெல்லி: பஞ்சாப்பில் மின்வெட்டு பிரச்னை குறித்து முன்னாள் அமைச்சர் சித்து பேசிய நிலையில், அவர் ரூ.8 லட்சம் மின்கட்டண தொகை செலுத்தாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். சமீபத்தில், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தனது சொந்த கட்சி அரசையே சித்து கடுமையாக விமர்சித்தார். முதல்வர் சரியான நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் பஞ்சாப்பில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டு இருக்காது என குற்றம்சாட்டினார். இந்நிலையில். தனது வீட்டிற்கு சித்து இதுவரை மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.