கணவர் உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மீது நடிகை ராதா வடபழனி காவல் நிலையத்தில் புகார்

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா(38). முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் போலீஸ் எஸ்ஐ வசந்த ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை 2வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை சித்திரவதை செய்து மிரட்டுவதாக புகார் அளித்து பின் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். இதற்கிடையில் உதவி ஆய்வாளர் வசந்த ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நடிகை ராதா, வசந்த ராஜா துறை ரீதியிலான விசாரணையின்போது தனக்கு சாதகமாக பேசுமாறு கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக நேற்று  பரங்கிமலை இணை ஆணையரிடமும் அதனைத் தொடர்ந்து நேற்று வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மேலும் வசந்த ராஜாவிற்கு உடந்தையாக செயல்பட்டதாக பாரதி மற்றும் இளம்பருதி ஆகிய இரண்டு உதவி ஆய்வாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது. இதுகுறித்து நடிகை ராதா கூறியதாவது: என்னை தனியாக அழைத்துச் சென்று வசந்தராஜாவும், பெண் உதவி ஆய்வாளரான பாரதியும் வற்புறுத்தி வாபஸ் வாங்க வைத்தனர். அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Related Stories: