திருச்சி: இந்தியா - சீனா எல்லையான சிக்கிமில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர் தேவஆனந்த் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ் ராஜம்மாள் தம்பதியின் மகன் தேவஆனந்த்(25). ராணுவ வீரரான இவர் தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தார். நேற்று முன்தினம் சிக்கிம் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணியை முடித்து விட்டு தங்கியிருந்த இடத்துக்கு ராணுவ டிரக்கில் திரும்பி கொண்டிருந்தார்.