பியோங்யாங்: வடகொரியாவில் கொரோனாவே இல்லை என கூறி வந்த அதிபர் கிம் ஜாங் உன், நாட்டிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக கோபமடைந்து உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார். கொரோனா எதிரொலியாக வடகொரியாவின் எல்லைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு பஞ்சம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே நீண்ட காலமாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த அதிபர் கிம் ஜாங் உன், இரண்டு நாட்களுக்கு முன் வெளி உலகில் தலைகாட்டினார். உடல் மெலிந்து பரிதாபமாக காட்சியளித்த அவரை கண்டு வடகொரிய மக்கள் வருந்தினர்.