கொடைக்கானல்:கொடைக்கானல் பள்ளி மாணவர் ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் செய்து ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அஜயன் மகன் அஜய் பிரசன்னன் (16). தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையின் ஊக்குவிப்பால் சாதனை படைக்க வேண்டுமென முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் ‘பிட்ஜெட் ஸ்பின்னர்’ சுழற்றி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதன்பிறகு ஒரு நிமிடத்தில் 82 முறை தோப்புக்கரணம் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார்.