ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் நெல் சாகுபடி கணக்கெடுப்பு

ஆற்காடு : ஆற்காடு அருகே வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்து விவசாய நிலத்தில் நெல் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு நடத்தினர். ஆற்காடு அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் காமாட்சி, வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டு பயிர் ஆய்வு செய்து நெல் சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

மேலும், விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதேபோல், கே.வேளூர் கிராமத்திலும் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர் வினோத், துணை வேளாண்மை அலுவலர் கண்ணன், விஏஓக்கள் ராஜலட்சுமி, கபிலன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: