ஆற்காடு : ஆற்காடு அருகே வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்து விவசாய நிலத்தில் நெல் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு நடத்தினர். ஆற்காடு அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் காமாட்சி, வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டு பயிர் ஆய்வு செய்து நெல் சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.