திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் நம்பி நாராயணன். 1994ம் ஆண்டு விண்வெளி ஆய்வு ரகசியத்தை வெளிநாட்டுக்கு இவர் வழங்கியதாக கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக இதை விசாரித்த சிபிஐ, நம்பிநாராயணன் நிரபராதி என்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தன்னை கைது செய்ததில் உள்ள சதி திட்டம் பற்றி விசாரிக்க உத்தரவிடும்்படி உச்ச நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.