சென்னை 'தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை'!: அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!! Jun 25, 2021 அமைச்சர் பொன்ஹேரி சென்னை: தனியார் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார். சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக சென்னை தரமணியில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 - 22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இணையவழியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதை தவிர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணையதள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,120 இடங்களுக்கு மாணவர்கள் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 11ம் வகுப்பில் சேர்வதற்கு என்ன தகுதியோ அதே தகுதி தான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும் என்றார் அவர். சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு அடுத்த மாதம் 31ம் தேதி தான் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருப்பதால் அந்த நாளுக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்
நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்: 2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்
அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு