காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது

டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் மத்திய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கியது. காணொலியில் நடக்கும் 12-வது கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்பப்பிரிவு தலைவர் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து விவாதிக்க வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: