மதுரை: கன்னியாகுமரி மாவட்ட மரபுசார் மீட்பு குழு செயலாளர் கிருஷ்ணமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது ஆங்கிலேயர்களால் கோயில் மற்றும் அவை சார்ந்த நிலங்கள் அரசு புறம்போக்கு என வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டன. தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்தாலும், இன்னும் இவை வருவாய் ஆவணங்களில் கோயில்-அரசு புறம்போக்கு என்றே உள்ளது. இதனால் ஆக்கிரமிப்பில் இருக்கலாம்.ஜமாபந்தியின்போது சம்பந்தப்பட்ட நிலத்தின் நிலை, ஆக்கிரமிப்பு உள்ளதா, எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது குறித்து ஜமாபந்தி அலுவலர் மூலம் அறிக்கையளிக்க வேண்டும். இதன்படி, நடைபெறவுள்ள ஜமாபந்தியில் கோயில் அரசு புறம்போக்கு நிலத்தின் நிலை, ஆக்கிரமிப்பு விவரம், நிலத்தின் அளவு உள்ளிட்டவை குறித்து அறிக்கையளிக்குமாறு உத்தரவிட வேண்டும்.