திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே கடந்த 8 மாதங்களாக பாசன கிணறுகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது மம்சாபுரம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மம்சாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு கடந்த 8 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.