தமிழகம் நாகை மாவட்டத்தின் கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது!: நெல்மணிகள், மலர்தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு..!! Jun 21, 2021 நாகை மாவட்டம் நாகை: நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை அடுத்து விவசாயிகள் ஆற்றில் நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றார்கள். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்ட நிலையில், திருவாரூர், நாகை மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. நாகை மாவட்டத்தின் கடைசி நீர் ஒழுங்கியான இளையான்குடி பாண்டவி ஆற்றில் வந்து சேர்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் உற்சாகமாக வரவேற்றார்கள். மலர்கள் மற்றும் நெல்மணிகள் தூவி விவசாயிகள் வரவேற்க, பெண்கள் கும்மிப்பாட்டு பாடி ஆரத்தி எடுத்து காவிரி தாயை வணங்கினார்கள். உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நீர் இரண்டாவது முறையாக கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால் காவிரி டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்திருப்பதால் குறுவை சாகுபடி பணிகள் தொடங்குவதன் 13 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு