தமிழகம் நாகையில் அர்ச்சகர்கள் - பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி விநியோகம்!: எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி பயனாளிகளுக்கு வழங்கினர்..!! Jun 19, 2021 ஷாநவாஸ் நாகி மாலி நாகை: இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. நாகையில் கலைஞர் பிறந்தநாள் விழாவை ஒட்டி இந்து அறநிலையத்துறை சார்பில் 218 கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. நீலாயுத்தாட்சியம்மன் கோவிலில் நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 132 பயனாளிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி ஆகியோர் நிவாரணம் மற்றும் உதவி பொருட்களை வழங்கினர். விழுப்புர மாவட்டம் மரக்காணத்தில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர். மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் காய்கறி, அரசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 100 பேருக்கு நிவாரணமாக அளித்தனர். தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரசி மற்றும் மளிகைப் பொருட்களை அளித்தனர். திருப்பதி திருமலா தேவஸ்தான தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இதனை வழங்கினார். இதேபோல சிவகாசி சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய, வாய் பேசாத, காத்து கேளாதோர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இளம் தொழில் முனைவோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு
அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி தேவையில்லை: கலெக்டரின் உத்தரவு ரத்து, ஐகோர்ட் கிளை அதிரடி
சொந்த ஊர் செல்லும் வாக்காளர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கம்!
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு