தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் கவர்னருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை

சென்னை: கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து பேசினார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கவர்னர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தலைமை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: