நெல்லை: நெல்லை மாநகர் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகும் சுவரொட்டி மூலம் எடப்பாடிக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இருவருமே தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.