புதுடெல்லி: எய்ட்ஸ் பெண் நோயாளி ஒருவரின் உடலில் 216 நாட்கள் வரை தங்கிய கொரோனா அடுத்தடுத்து பல உருமாற்றம் அடைந்த சம்பவம் ஆய்வாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 36 வயதாகின்றது. இவரது பெயர் வெளியிடப்பட்டவில்லை. இவர் கடந்த சில ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒருவரது உடலில் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகின்றது. எய்ட்ஸ் நோய் பாதித்த பெண்ணின் உடலில் சுமார் 216 நாட்கள் தொற்று இருந்துள்ளது.