தமிழக அரசுக்கு பாஜ எம்எல்ஏ பாராட்டு

நெல்லை: கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாஜ துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கொரோனா நிவாரண பொருட்களை எம்எல்ஏவும் பாஜ துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் நேற்று தனியார் நிறுவன பங்களிப்போடு வழங்கினார். பின்னர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், கொரோனா பேரிடர் உள்ள நெருக்கடியான காலக்கட்டத்தில் தமிழக அரசு முடிந்தவரை சிறப்பாக செயல்படுகிறது. இப்போதைய சூழலில் அரசுக்கு நாம் அனைவருமே உறுதுணையாக இருப்பதே நல்லது என்றார்.

Related Stories: