தமிழகம் கருவாடு கூட மீன் ஆகலாம், சசிகலா ஒருபோதும் அதிமுக உறுப்பினராக முடியாது!: ஆடியோ குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி..!! Jun 07, 2021 சசிகலா முன்னாள் அமைச்சர் சி. விழுப்புரம்: அதிமுக தொண்டர்களிடம் வி.கே.சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுக உறுப்பினராக முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்கிற செய்தி வெளியாகும் நிலையில், சசிகலா திடீரென தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார். நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்துவிடலாம் என்று தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஓ. பன்னீர் செல்வத்துடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சியில் குழப்பம் ஏற்படுத்தவே சசிகலா ஆடியோ வெளியிடுகிறார் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் உரையாடியது குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுக-வின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே அவருக்கு உதவியாளராக இருந்து வந்தார். அவ்வளவு தான். அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எங்கள் மூத்தவர் காளிமுத்து கருவாடு மீன் ஆகாது என்று சொன்னார். தற்போது கருவாடு கூட மீன் ஆகிவிடலாம். ஆனால், அதிமுக-வில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!
ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை
திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்; கண்ணீர் விடும் விவசாயிகள்..!!
சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல்; காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 9442255737-ல் தொடர்பு கொள்ளலாம் : திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் ரூ.744 கோடி மதிப்பீட்டில் மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாட்டில் தடையின்றி மின்விநியோகம்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
புதிய தடயம் சிக்கியது!: எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயில் இருந்து கைப்பற்றப்பட்ட இரும்பு பிரஷ்..போலீஸ் தீவிர விசாரணை..!!