`புன்னகை மன்னன்’ நடராஜன்: புது பட்டம் கொடுத்து மனைவி பூரிப்பு

கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது மூன்றுவிதமான கிரிக்கெட் தொடர்களில் அறிமுகமான ‘யார்க்கர் கிங்’ நடராஜன், சிறந்த பவுலர் மட்டும் அல்லாமல் சிறந்த கணவர் என்றும் நிரூபித்து வருகிறார். தனது பள்ளி தோழியான பவித்ராவை திருமணம் செய்தார். இந்நிலையில் மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் நடராஜனின் மனைவி பவித்ரா இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறோம். உங்களது புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது.

என் வாழ்க்கையின் காதலுக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள்” என நடராஜனின் மனைவி பவித்ரா வாழ்த்துக்கள் கூறியதுடன் அவர் புன்னகை மன்னன் எனவும் செல்லமாய் கூறியுள்ளார். யார்க்கர் கிங் என்ற பட்டம் மாஸ் ஆக இருந்தாலும் புன்னகை மன்னன் க்யூட்டாக உள்ளது என ரசிகர்களால் கூறப்படுகிறது. ஐபிஎல் 13ஆவது சீசனின் சிறப்பாக விளையாடி, முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்த நடராஜன், அதன் பிறகு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களில் அறிமுகமாகி நல்லமுறையில் சோபித்தார். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை வெல்ல இவரும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: