லக்னோ: எட்டாவா சிறையில் இருந்து வெளியே வந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் கொரோனா விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் யவ்ஜன் சபா தலைவர் அவுரியா தர்மேந்திர யாதவ் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. சிவில் லைன்ஸ் போலீசார், இவரை ரவுடி சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று அவர் எட்டாவா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் விடுதலையாகி வருவதை அறிந்த அவரது ஆதாரவாளர்கள் சிறை வளாகத்தின் முன் குவித்தனர். சில மணி நேரங்களில் அவுரியா சிறையில் இருந்து வெளியே வந்த போது, அவருக்கு ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து கோஷமிட்டனர்.