மும்பை: 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ம தேதி தொடங்கி இந்தியாவில் நடந்து வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்றால் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர்-அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அணிகளின் உரிமையாளர்களுக்கு செலவுகள் இரட்டிப்பாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, பயணச் செலவுகள் இரட்டிப்பாகும். வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே ஒரு முறை வந்து வெளியேறி விட்டனர். விமானத்தில், வணிக வகுப்பில் 2வது முறையாக அவர்களை துபாய் அழைத்து வருவது, மீண்டும் திருப்பி அனுப்புவது என இருமடங்கு செலவாகும். பல வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு தொடர்களில் ஆடுவதால் அவர்களை தனி விமானத்தில் தான் அழைத்து வரவேண்டி இருக்கும்.