புதுடெல்லி: மத்திய அரசின் புதிய விதிமுறைக்கு இணங்குவதாக பேஸ்புக், கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை டிவிட்டர் மட்டுமே விதிமுறைகளை ஏற்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறைகளை ஏற்க 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறைப்படி, நிறுவனங்கள் பயனாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மூன்றடுக்கு முறையில் குறைதீர் அதிகாரிகளை நியமித்து அவர்களின் தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுக விதிக்கப்பட்டுள்ளன.