துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 52 கிலோ எடை பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பங்கல் கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவ்வுடன் நேற்று மோதினார். இதில் 5-0 என்ற புள்ளி கணக்கில், பிபோசினோவை தோற்கடித்து அமித் பங்கல் பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சிவா தாபா 64 கிலோ எடை பிரிவில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனான தஜிகிஸ்தானின் பகோதூர் உஸ்மோனோவை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தார். இதேபோல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 4பேர் இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.