மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், கூறுகையில், “ரிஷப் பன்ட் அணிக்குள் வந்ததிலிருந்து முதிர்ச்சியுடன் விளையாடுகிறார். முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு கடினமான ஷாட்களைகூட மிக சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.