நேப்பியாதவ்: மியான்மரில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அங்கு கடந்த 4 மாதங்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பல்வேறு அடக்குமுறைகளை ராணுவம் கையாண்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக தற்போது போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை ராணுவம் சுட்டுத் தள்ளி நிஜ காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை ராணுவமே வெளியிடுகிறது. அந்த புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குகிறது.