புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அமெரிக்க நாட்டு நிறுவனங்களான மாடர்னா, பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மாடர்னா தடுப்பூசி உற்பத்தி செய்ய சிப்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாடர்னா தடுப்பூசி 5 கோடி டோஸை உற்பத்தி செய்ய சிப்லா நிறுவனம் மத்திய அரசிடம் ஏற்கனவே அனுமதி கேட்டுள்ளது.