பள்ளிப்பட்டு: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீச்சலம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முதல் 2 நாட்கள் ஜாத்திரை விழா நடத்தப்பட்டது. இதில் புது கீச்சலம் பகுதியை சேர்ந்த 140க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கிராமத்துக்கு அருகில் உள்ள அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து அனைவரும் குடும்பத்துடன் பூஜைகள் செய்தனர்.