மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக ஒரு இயக்கத்தை தொடங்கினர். மேலும் அவர்கள் 2 கோடி நன்கொடை அளித்தனர். இந்த இயக்கத்தின் மூலம் இதுவரை 11 கோடி ரூபாய் திரட்டி உள்ளனர். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை கே.எஸ்.கே.எஸ். ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார் எஸ்.கே. சுமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக விராட் கோலி ரூ.6.77 லட்சம் வழங்கி உள்ளார்.